தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனன் தலைமையில் சென்னையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ‘கலர்ஸ் 2.0’ வெல்ல்னஸ் சென்டர்

தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனன் தலைமையில் சென்னையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ‘கலர்ஸ் 2.0’ வெல்ல்னஸ் சென்டர்

சென்னை: முன்னணி வெல்ல்னஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனம் ‘கலர்ஸ்’ (கலர்ஸ் ஹெல்த் கேர் 2.0) தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை ஈஸ்ட் அண்ணாநகரில் அதிநவீன வசதிகளுடன் புதிய கிளையை சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனன் ஜோதி ஏற்றி ‘கலர்ஸ் 2.0’ வெல்ல்னஸ் சென்டரை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாளவிகா மோகனன், ஆரோக்கியமும் அழகும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் இளைஞர்கள் தங்களது உடல் தகுதி மற்றும் சத்துணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சரியான உணவுப் பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் இயற்கையான அழகையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கும் என்றார். சென்னை மக்களுக்கு சர்வதேச தரத்திலான வெல்ல்னஸ் சேவைகளை கொண்டு வருவது பாராட்டத்தக்க முயற்சி என்றும் கூறினார். உடல் எடை குறைப்பு, சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு ‘கலர்ஸ்’ வழங்கும் சேவைகள் புதிய தன்னம்பிக்கையை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கலர்ஸ் ஹெல்த் கேர் நிர்வாக இயக்குநர் வெங்கட சிவாஜி கூனா பேசுகையில், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் ஏற்கனவே பல நகரங்கள் மற்றும் பட்டணங்களில் தங்கள் நிறுவனம் வெற்றிகரமாக சேவையளித்து வருவதாக தெரிவித்தார். சமீபத்தில் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் புதிய கிளையைத் தொடங்கியதையடுத்து, தற்போது சென்னையிலும் புதிய மையத்தைத் தொடங்குவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

கடந்த 22 ஆண்டுகளாக வெல்ல்னஸ் துறையில் சிறப்பான அனுபவத்துடன் செயல்பட்டு வரும் தங்கள் நிறுவனம், உடல் எடை கட்டுப்பாட்டின் மூலம் சுமார் 90 வகையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சிறப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளதாக விளக்கினார். தற்போது நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்கள், 100 நிபுணர் மருத்துவர்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அங்கீகாரம் பெற்ற அதிநவீன கருவிகளின் மூலம் ‘கலர்ஸ் 2.0’ வழியாக உலகத் தரத்திலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்றும் கூறினார்.

மேனேஜிங் டைரக்டர் டாக்டர் விஜய் கிருஷ்ணா பேசுகையில், இரண்டு தசாப்தங்களாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ‘கலர்ஸ்’ நிறுவனம், சென்னை மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த மையத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார். ஆப்பரேஷன்ஸ் டைரக்டர் கிருஷ்ண ராஜ் தும்மலா பேசுகையில், நாடு முழுவதும் 51 தோல் மருத்துவ நிபுணர்களுடன் சேவையளிக்கும் ஒரே வெல்ல்னஸ் நிறுவனம் தங்கள்தான் என்று பெருமையுடன் கூறினார்.

5எம் மீடியா சார்பில் ஜெய்தீப் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அதிநவீன வெல்ல்னஸ் சேவைகள் இனி சென்னை மக்களுக்கு மேலும் எளிதில் கிடைக்கப் போவதாக உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *