ராஷ்மிகா மந்தனா மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்த “டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” படத்தின் சிறப்புக் காட்சி

ராஷ்மிகா மந்தனா மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்த “டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” படத்தின் சிறப்புக் காட்சி;

“டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” திரைப்படத்தின் ரசிகர்களுக்கு மட்டும் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சி, அனிமேஷன் உலகின் மிகப்பெரிய கலாச்சார கொண்டாட்டமாக மாறியது. கிரன்சிரோல் மற்றும் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், அனிமீ ரசிகர்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் 250க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியது, இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது.

கதாநாயகர்கள் தஞ்சிரோ மற்றும் நெசுகோவை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையில் வந்திருந்தார் நடிகை ராஷ்மிகா.

தனது விருப்பமான கதாபாத்திரமான ஜெனிட்சுவை சுட்டிக்காட்டும் ஜாக்கெட்டில் வருகை தந்திருந்தார் நடிகர் டைகர் ஷெராஃப்.

ரசிகர்களுடன் உரையாடியபோது டைகர் ஷெராஃப் கூறுகையில்,

படத்தில் தான் ரசித்த சண்டைக் காட்சியைப் பற்றி பேசினார். குறிப்பாக ஜெனிட்சு மற்றும் கைகாகுவுக்கு இடையேயான காட்சியே அவருக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், கோட்டையில் அமைதியாக நுழைந்த ஒரே மனிதர் ஜெனிட்சுதான் என்று நினைத்ததாகவும் கூறினார்.

ராஷ்மிகாவுக்கு பிடித்த காட்சியை கேட்டபோது,

அகாசா vs கியு மற்றும் தஞ்சிரோ சண்டைக் காட்சி ரசிகர்களிடமிருந்து அதிரடியான வரவேற்பைப் பெற்றது என்று கூறினார்.

நிகழ்ச்சியின் சூழலை மேலும் சிறப்பாக்க மாபெரும் தஞ்சிரோ இன்ஃப்ளேடபிள் சிலை, கதாபாத்திர ஸ்டாண்டீக்கள் மற்றும் சீரியஸிலிருந்து வண்ணமயமான காட்சிகள் கொண்டு மொத்த இடமும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் வெளியாக உள்ள படத்திற்கு முன் நடத்தப்பட்ட இந்த ஸ்கிரீனிங், ரசிகர்களுக்கு இன்ஃபினிட்டி கேஸ்டில் படத்தின் உணர்ச்சி பூர்வமான மற்றும் அதிரடி நிறைந்த உலகை முன்னதாகவே அனுபவிக்க வைத்தது. சில நேரங்களில் கண்ணீர் வடிக்கவும், சில நேரங்களில் சண்டைக் காட்சிகளில் ஆரவாரம் செய்யவும் வைத்தது, இப்படத்தைச் சுற்றியுள்ள பரபரப்பை ரசிகர்களிடையே வெளிப்படுத்தியது.

இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” திரைப்படத்தின் முன்பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 750-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், இந்தியாவில் ஒரு அனிமீ திரைப்படத்திற்கு கிடைக்கப்போகும் அதிகபட்ச திரையிடல் என்ற பெருமையையும் பெறுகிறது.

கிரன்சிரோல் மற்றும் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா இணைந்து, இந்த படத்தை செப்டம்பர் 12 முதல் ஐந்து மொழிகளில் வெளியிடுகிறது – ஜப்பானிய மொழி (ஆங்கில சப்டைட்டில்களுடன்), ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *