விருந்து படம் எப்படி இருக்கு

விருந்து

இயக்குனர் – தாமரை கண்ணன்
நடிகர்கள் – அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நாயர், ஹரிஷ் பேரடி
இசை – ரதிஷ் வேகா,
தயாரிப்பு – தாமரை கண்ணன்
 

ஒரு பெண்ணின் தாய் மற்றும் தந்தை அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால், அந்தப் பெண்ணிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க, அந்த பாதுகாப்பையும் மீறி அவரை கொலை செய்ய சில மர்ம கும்பல் முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து அந்தப் பெண் தப்பித்தாலும், அந்த கும்பல் தொடர்ந்து அவரை துரத்த, அடர்ந்த வனப்பகுதியில் அந்த கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அவர்களிடம் இருந்து அப்பெண்ணை காப்பாற்றி வனப்பகுதியில் உள்ள தனது வீட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் ஒருவர், ஆனால் அடைக்கலம் கொடுத்தவரும் கொலை செய்ய முயற்சிக்க, அதன் பிறகு என்ன நடந்தது? அந்தப் பெண் யார் என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

 
திரையில் நாயகனாக நடித்து பின் கௌரவ தோற்றத்தில் நடித்து பல நாட்களுக்கு பின் மீண்டும் நாயகனாக களம் இறங்கியிருக்கும் அர்ஜுன், இதில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டுமே வலம் வருகிறார். அவருக்கு ஜோடியோ, டூயட் பாடலோ இல்லை என்றாலும், தனது ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்து படைத்திருக்கிறார். படத்தின் போக்கை புரிந்து சிறப்பாக நடித்துள்ளார்,

இந்தப் படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார், அவரை சுற்றித்தான் மொத்த படமும் நடக்கிறது , தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டு ஆரம்பத்தில் பயந்தாலும், பிறகு அதற்கான விடை தேடி பயணிக்கும் காட்சிகளில் அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார். இவருக்கும் இந்தப் படம் ஒரு கம்பேக்காக இருக்கும்,
 

மேலும் இந்தப் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் கிரீஷ் நெய்யார், திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவருக்காக படத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிளை கதையும், அதில் வரும் அவரது தந்தை மற்றும் தங்கை செண்டிமெண்ட் கவனம் ஈர்க்கிறது. சிறிய வேடம் என்றாலும் ஹரிஷ் பெராடியின் கதாபாத்திரமும், நடிப்பும் மிரட்டல். பாலண்ணா என்ற கதாபாத்திரத்தில் கம்யூனிச  தலைவராக நடித்திருக்கும் நடிகரின் திரை இருப்பு, திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இந்தப்படத்திற்கு ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயர் என இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர், வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளின் அழகு நம்மை வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது , இயற்கையின் அழகோடு திகில் காட்சிகளின் பதற்றத்தையும் இவர்களது கேமரா பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

மேலும் இந்தப் படத்திற்கு ரதீஷ் வேகா இசையமைத்துள்ளார், அவரது இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தது, 2 பாடல்கள் கேட்பதற்கு ரமியமாக இருந்தது, ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன் ஆகியோர் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளனர் . பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்து நம்முடன் பயணிக்க வைத்திருக்கிறது,

இந்த படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் அழைத்துச் செல்லும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிரார் படத்தொகுப்பாளர் வி.டி.ஸ்ரீஜித், இறுதி வரை அடுத்தது என்ன நடக்கும்? என்ற கேள்வியோடு ஒவ்வொரு காட்சியையும் எதிர்பார்ப்புடன் பயணிக்க வைத்திருக்கிறார்.

இயக்குநர் தாமரை கண்ணன் செய்தி தாள்களில் வரும் செய்திகளை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை எழுதி இயக்கியுள்ளார் , படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் காட்சிகளையும், திரைக்கதையையும் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். அடுத்தடுத்து  நடக்கும் இரண்டு கொலைகள், அதனை சுற்றி நடக்கும் சில மர்மமான சம்பவங்களை வைத்துக்கொண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர், படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘விருந்து’ ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் விருந்து.

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *