இயக்குநர் மணி ரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்!

இயக்குநர் மணி ரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்!

ஷனாயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் நடித்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான ‘து யா மெயின்’ சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பரபரப்பான மற்றும் அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தென்னிந்தியாவில் நடைபெற்ற இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் மணி ரத்னம் படத்தை பாராட்டினார்.

படத்தின் சிறப்பு திரையிடலுக்கு பின்பு ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தைப் பாராட்டிய காணொளிகளை பார்க்க முடிகிறது. சிலர் இதை அற்புதமான படம் எனவும், இன்னும் சிலர் படம் புதிய அனுபவத்தை கொடுத்தது எனவும் புகழ்ந்தனர். குறிப்பாக, படத்தின் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றன. படம் பார்த்துவிட்டு இயக்குநர் மணி ரத்னம் பகிர்ந்து கொண்டதாவது, “பிஜாய் நம்பியாரின் எனர்ஜி இந்தப் படத்திற்கு பெரும் பலம். பெரிய திரையில் ரசிகர்களுடன் படம் பார்க்கும்போது அதை முழுமையாக அனுபவிக்க முடியும்” என்றார்.

விறுவிறுப்பான மற்றும் அதிரடி தருணங்கள் நிரம்பியுள்ள ‘து யா மெயின்’ சிறந்த திரையரங்க அனுபவம் தரும் திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். ஆனந்த் எல் ராய் மற்றும் ஹிமான்ஷு சர்மா தலைமையிலான கலர் யெல்லோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன், வினோத் பானுஷாலி மற்றும்
கமலேஷ் பானுஷாலி ஆகியோரின் பானுஷாலி ஸ்டுடியோஸ் லிமிடெட் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இன்றைய இளைஞர்கள் நேரடியாக பொருந்திப் பார்த்துக் கொள்ளும்படியான உணர்வுகளையும், சீட்டின் நுனியில் அமர வைக்கும் விறுவிறுப்பான திரைக்கதையும் கொண்டுள்ள இந்த திரைப்படத்தை உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *