
’அறம் செய்’
இயக்கம் – பாலு எஸ் வைத்தியநாதன்
நடிகர்கள் – பாலு எஸ் வைத்தியநாதன், அஞ்சனா கீர்த்தி , மேகாலி மீனாக்ஷி
இசை – ஶ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு – தாரகை சினிமாஸ்
மருத்துவ மாணவரான நாயகன் , தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்களுடன் சேர்ந்து போராடுகிறார். இதனால், அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகிறது. மறுபக்கம், நாயகி அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. இதனால், தங்கள் தரப்பில் பல இழப்புகளை சந்தித்தாலும், கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா?, என்பது தான் படத்தின் கதை.
கதை, வசனம், திரைக்கதை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், சமூகப்பிரச்சனைப் பற்றி பேசுவதற்கு பதிலாக சமூகமே பிரச்சனையில் தான் இருக்கிறது, என்ற ரீதியில் படம் முழுவதும் பல விசயங்களை, பல மணி நேரம் பேசியிருக்கிறார். மாணவர்களுடன் சேர்ந்து அகிம்சை வழியில் போராடும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், அவ்வபோது மேகாலியுடன் டூயட் பாடல் பாடி, தனது நாயகன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்..” என்ற பாரதியாரின் கவிதையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அஞ்சனா கிர்த்தி நடித்திருக்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் தெரிந்தாலும், அவரது தோற்றம் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதமாக இருந்தது,. பின்னணி இசையிலும் சில இடங்களில் கவனிக்க வைத்தார்,
இந்தப் படத்தை பாலு எஸ் வைத்தியநாதன் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அனிதா பற்றி பல திரைப்படங்களில் பேசியிருக்கிறார்கள், ஆனால் இந்த படத்தில் அந்த அனிதாவையே பேச வைத்திருக்கும் காட்சி பாராட்டும்படி இருக்கிறது. இப்படி சில காட்சிகள் இருந்தாலும், படத்தின் நீளம் 3 மணி நேரத்திற்கு மேலாக இருப்பது ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து விடுகிறது.
மொத்தத்தில், ‘அறம் செய்’ அறத்தை பரப்புகிறது,
Rating 2.5/5