
ராஜபீமா
இயக்கம் – நரேஷ் சம்பத்
நடிகர்கள் – ஆரவ் , ஆஷிமா நர்வால் , யோகி பாபு , நாசர்
இசை – சைமன் கிங்க்
தயாரிப்பு – சுரபி ஃபில்ம்ஸ் – எஸ் மோகன்
பொள்ளாச்சியில் ஒரு பணக்கார வீட்டின் சிறுவன் தன் ஊருக்கு வந்த யானையை பார்க்கிறான் , அதன் பின் அவனுக்கு யானையை வளர்க்கும் ஆசை வருகிறது, அவனது தந்தையும் அதை வளர்க்க சம்மதிக்கிறார், யானை வளர அவனும் வளர்கிறான், இதற்கிடையில் யானையின் தந்தங்களை திருடி விர்க்கும் ஒருவனுக்கும் நாயகனுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது , இதனால் அவன் அந்த யானையை கடத்தி விடுகிறான், அவனிடமிருந்து அந்த யானையை காப்பாற்றினா ? இல்லையா ? என்பதே இப்படத்தின் கதை,
கழகத்தலைவன் படத்திற்கு பின் பிக்பாஸ் ஆரவ் நாயகனாக நடித்து வெளியாகியுள்ளது இப்படம், வரும் பிப்ரவரி 6 அன்று அஜித்துடன் இவர் நடித்திருக்கும் விடாமுயற்சி வெளியாவதற்கு முன் இப்படம் வந்துள்ளது, ஆரவ் இந்தப் படத்தில் அந்த ஊர் மக்களாகவே இருக்கிறார், கதையுடன் ஒன்றி அப்படி ஒரு சிறப்பான நடிப்பை இந்தப் படத்திற்கு கொடுத்துள்ளார், ஆக்சன் காட்சிகள் மட்டுமல்லாமல் யானையின் பாசப்பிணைப்பு காட்சிகளில் நம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார்,
இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார், தனது கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு அளவான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்,
படத்தில் மிகப்பெரிய நடிப்பு பட்டாளமே நடித்துள்ளனர், யோகி பாபு , நாசர் , கே எஸ் ரவிக்குமார் என அனைவரும் தங்க்ளுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர், குறிப்பாக யோகி பாபுவுக்கே உரித்தான பாவனைகள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார், அவரது அப்பப்போதைய டைமிங்க் காமேடிகள் படத்தை இருக்கப் பிடித்துள்ளது,
இந்தப் படத்திற்கு சைமன் கிங்க் இசையமைத்துள்ளார், அவர்து இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் இருந்தது, பிண்ணனி இசை சண்டைக்காட்சிகளுக்கும் , விறுவிறுப்பான காட்சிகளுக்கும் பெரிதும் உதவியுள்ளது, ஒளிப்பதிவாளர் இயற்கையின் எழில் மிகு அழகை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார், காட்சிகள் கண்களுக்கு விருந்தாக இருந்தது,
இந்தப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் நரேஷ் சம்பத், யானை வளர்ப்பவர்களுக்கு அந்த யானை குடும்பத்தில் ஒருவர் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்த்தி விட்டார் , சமீப காலங்களில் தான் தந்தத்திற்காக யானை கொலை செய்யும் அளவு குறைந்திருக்கிறது, முன்பெல்லாம் பல யானைகளை சடலமாக வனத்துறை மீட்டிருக்கின்றனர், அவர்கள் தங்கள் தவறை உணர்த்தும் வண்ண்ம் இந்தப் படம் அமைந்துள்ளது.
மொத்தத்தில் இந்த ‘ராஜபீமா’ நம்மை சிந்திக்க வைக்கும்.
Rating 3 / 5