பெருசு படம் எப்படி இருக்கு?

’பெருசு’

இயக்குனர் – இளங்கோ ராம் ,
நடிகர்கள் – வைபவ் , சுனில், நிஹாரிகா, சாந்தினி ,பாலா சரவணன், முணிஷ்காந்த், VTV கணேஷ்
இசை – அருண் ராஜ்
தயாரிப்பு – ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், கார்த்திகேயன்

ஊரில் மதிப்பும், மரியாதையும் உள்ள பெருசு என்பவரின் மகன்கள் ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும்போது டிவி பார்க்கும் பெருசு திடீரென்று இறந்து விடுகிறார். ஆனால், அவரது உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது. சடலத்தை காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை மறைக்கவும் முடியாமல் திணறும் குடும்பத்தார், எப்படி பிரச்சனையை சமாளித்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்வதே ’பெருசு’.

இந்தப்படத்தில் வைபவ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், எப்போதும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் வைபவ், இயல்பான காமெடி மூலம் தனது கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிரார், அவரது டைமிங் ரியாக்ஷன் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது ,

மற்றொரு பக்கம் வீட்டின் மூத்த பிள்ளை கதாபாத்திரத்திரல், பல பொறுப்புகளை கவனிக்கும் சுனில், தனக்கு கொடுக்கப்பட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்,
சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், வைபவின் மனைவியாக நடித்திருக்கிறார் நாயகி நிஹாரிகா, காதல் காட்சிகள் குறைவுதான் எனினும் தனக்கு கொடுக்கப்பட்ட கதபாதரித்தில் தன்னால் முடிந்த அளவு ஸ்கோர் செய்துள்ளார்,

பாலசரவணன், முனீஷ்காந்த் ஆகியோரது கூட்டணி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோர் வரும் காட்சிகள் சிரிப்பை கொடுக்கிறது. தனம், தீபா, கஜராஜ், சுவாமிநாதன், கருணாகரன் என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் தலைகாட்டிச் செல்கிறார்கள்.

இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அருண் ராஜின் இசையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் பின்னணி இசை மூலம் நகைச்சுவை உணர்வை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் மிகப்பெரிய பொறுப்பு ஒளிப்பதிவாளருக்கு தான் , ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும், தனது வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளை உயிரோட்டத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம்.

இந்தப் படத்தை இளங்கோ ராம் எழுதி இயக்கியிருக்கிறார், அனைவரும் முகம் சுழிக்கும் ஒரு விசயத்தை எந்த ஒரு நெருடல் இல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்திச் சென்றிருக்கிறார். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கடி என்ற ரீதியில் படம் பயணித்தாலும், பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. இயக்குனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் இப்படி ஒரு கதையை குடும்பங்கள் என அனைவரும் பார்க்கும்படி ஒரு நகைச்சுவை படமாக உருவாக்கியுள்ளார்.

மொத்தத்தில், ‘பெருசு’ வாய் விட்டு சிரிப்பீர்கள்

Rating 3.1/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *